26 Nov 2020

கிராங்குளத்தில் ஏற்பட்ட சுழல் காற்றினால் பலத்த சேதம்.

SHARE

கிராங்குளத்தில் ஏற்பட்ட சுழல் காற்றினால் பலத்த சேதம்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப் பற்றுப் பிரதேசத்திற்குபட்பட்ட கிராங்குளம் கிராமத்தில் புதன்கிழமை (25) மாலை வீசிய பலத்த சுழல் காற்றினால் மிகுந்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

புதன்கிழமை மாலை அப்பகுதியில் பலத்த சுழல் காற்று வீசியுள்ளது. இதனால் பயன் தரும் பல மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மேலும் சுமார் 7 இற்கு மேற்பட்ட வீடுகள், மீனவர் தங்குமடம், காளிகோயிலில் பொருத்தப்பட்டிருந்து ஒலிபெருக்கி, போன்றன சேதமடைந்துள்ளதுடன் வீடுகளின் மதில்களும், வேலிகளும்,  உடைந்துள்ளன. 

பாதிக்கப்பட்ட இடத்தையும், மக்களையும் மண்முனைப் பற்று பிரதேச செயலக அதிகாரிகள் பார்வையிடுள்ளனர்.






















SHARE

Author: verified_user

0 Comments: