கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவ மழை பெய்ய ஆரம்பமாகியுள்ளது.
வியாழக்கிழமை (12) காலை இருமணிநேரத்தில் 14 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. காலை 7 மணிமுதல் 9 மணிமணிவரையான காலப்பகுதியில் கடுமையான அடைமழை பெய்தது. தொடர்மழை காரணமாக தாழ் நிலப் பிரதேசங்களில் நீர்தேங்கியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
கிழக்கில் நவம்பர் டிசம்பர் மாதங்கள் பருவமழை காலம் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment