14 Nov 2020

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் நந்தகோபனின் 12 வது ஆண்டு நினைவுதினம்.

SHARE

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் நந்தகோபனின் 12 வது ஆண்டு நினைவுதினம். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் ரகு என அழைக்கப்படும், குமாரசுவாமி நந்தகோபன் அவர்களின் 12 வது ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை (14) மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது குமாரசுவாமி நந்தகோபனின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிறித்து,  சுடர் ஏற்றி, அஞ்சலி செலுத்தப்பட்டன.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் க.யோகவேள், மற்றும், உபதலைவர் நா.திரவியம், உள்ளுராட்சிமன்ற  உறுப்பினர்கள், அன்னாரது குடும்ப உறுப்பினர்கள், கட்சியின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து, கலந்து கொண்டிருந்தனர்.

தமிம் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தலைவரான ரகு என அழைக்கப்படும், குமாரசுவாமி நந்தகோபன் அவர்கள்  திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி கொழும்பில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.



















SHARE

Author: verified_user

0 Comments: