மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (16) சகல தரப்பு மக்களும் முகக்கவசம் அணிந்து வெளியில் நடமாடியதை,பஸ்தரிப்பு நிலையம் பொதுச் சந்தைகள் மக்கள் கூடும் இடங்களில் சகலரும் முகக்கவசம் அணிந்திருந்ததுடன் சுகாதார நடைமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டதையும் காணமுடிந்தது.
குறுகிய மற்றும் நீண்டதூர பஸ்களில் சமுக இடைவெளி முழுமைய பேணப்பட்டே பயணிகள் பயணத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தின் அறிவத்தலை இம்மாவட்ட மக்கள் அனைவரும் பூரணமாக கடைப்பிடிப்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment