17 Oct 2020

மண் மேடு இடிந்து விழுந்ததில் இளைஞனொருவன் உயிரிழப்பு.

SHARE


மண் மேடு இடிந்து விழுந்ததில் இளைஞனொருவன் உயிரிழப்பு.

மட்டக்களப்பு கித்துள் ஆற்றுப் பகுதியில் வெள்ளிக்கிழமை (16) மாலை மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மண் மேடு இடிந்து விழுந்ததில் இளைஞனொருவன் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

இலுப்பட்டிச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ராஜசுந்தரம் சஜிந்தன்  20 வயது என்ற இளைஞனே   உயிரிழந்துள்ளார்.

குறித்த ஆற்றுப்பகுதியின் ஓரத்தில் மண் எடுத்துக்கொண்டிருக்கும்போது குறித்த மண் மேடு இடிந்துவீழ்ந்துள்ளது.இச்சம்பவத்தில் குறித்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கரடியனாறு மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.




SHARE

Author: verified_user

0 Comments: