2 Jul 2020

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் களுவாஞ்சிகுடியில் வெளியீடு.

SHARE
(இ.சுதா)

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் களுவாஞ்சிகுடியில் வெளியீடு.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிழக்கில் மீண்டும் மலரும் அபிவிருத்திக்கான புதுயுகம் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு கடந்த புதன் கிழமை களுவாஞ்சிகுடி அமரர் சீ.மு.இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்பத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் நடைபெற்றது.

தேர்தல் விஞ்ஞாபன கொள்கைப் பிரகடனத்தில் அரசியல் நம்பிக்கை, காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை, பழச் செய்கை உற்பத்தி சிறந்த நீர்ப்பாசன வசதிகள், கால் நடை உற்பத்தி, மீன்பிடி, பல்லாண்டுப் பயிர் செய்கை ,தென்னைச் செய்கை, மரமுந்திரிகை உற்பத்தி, பனைப்பயிர், காட்டு வளப்பாதுகாப்பு, கைத்தொழித்துறை, சுற்றுலாத்துறை ,சுகாதார வசதிகள், கல்வி ,வீடமைப்பு வசதிகள், வீதிப்புனரமைப்புக்கள், பாலங்களின் புனரமைப்பு, குடிநீர், வசதிகள், மின்சாரம், போக்குவரத்து விஸ்தரிப்பு ,விளையாட்டுத் துறையினை ஊக்குவித்தல் பெண்களின் ஆளுமைப்பாங்கினை வளர்த்தல், உள்ளூராட்சி நிருவாக கட்டமைப்பினை மாற்றியமைத்தல், நகர சபை அபிவிருத்தி போன்ற பல்வேறு அபிவிருத்தியினை இலக்காகக் கொண்ட தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டன.

நிகழ்வில் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், தொண்டர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.





SHARE

Author: verified_user

0 Comments: