(Rjh)
கண்ணபுரத்தில் யானை தாக்கி குடும்பஸ்தர் படுகாயம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலக நிருவாக எல்லைக்குட்பட்ட 35 ஆம் கிராமம் கண்ணபுரம் கிராமத்தினைச் சேர்ந்த எஸ்.நாராயணன் 56 வயதுடைய நான்கு பிள்ளைகளையுடைய குடும்ஸ்த்தரான விவசாயி ஒருவர் யானை தாக்கி படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (09) அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேலதிக சிகிச்கைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பாக தெரியவருவது..
விவசாய நடவடிக்கையின் நிமிர்த்தம் அவரது வயலுக்கு சென்ற வேளையில் எதிர் பாராத விதமாக காட்டுக்குள் நின்ற யானை குறித்த நபரை தாக்கியுள்ளது. யானை தாக்குவதனை அறிந்த அயலவர்கள் குறித்த நபரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment