காக்காச்சிவட்டையில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வும், நிவாரணப் பொதிகளும் வழங்கிவைப்பு.
இதன்போது இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினரால் கொரோனா தொடர்பான விழிப்புணர்வூட்டப்பட்டு, அது தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் தற்போதைய காலகட்டத்தினுள் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் நாளாந்தம் கூலித் தொழில் செய்பவர்கள் வருமானமிழந்துள்ளதனால் அவர்களுள் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு களுவாஞ்சிக்குடி சமூக வலுவூட்டலுக்கான மக்கள் அமைப்பினால் 100 குடும்பங்களுக்கு, கோதுமைமா, அரிசி, சீனி, உள்ளிட்ட நிவாரண பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
கிராமசேவை உத்தியோகத்தர் முத்துலிங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் நடராசா, களுவாஞ்சிக்குடி சமூக வலுவூட்டலுக்கான மக்கள் அமைப்பினால் தலைவர் எஸ். ஜேசு சகாயம், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் த.வசந்தராஜா, செயலாளர் எஸ்.மதிசுதன், பொருளாளர் வ.சக்திவேல், உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment