2 Nov 2019

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்களும் சஜித்துக்கு வாக்களித்து காட்டுங்கள்.வாழைச்சேனை காகித ஆலையை மீள ஆரம்பிப்பதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன் என ஈழவர் ஜனநாயக முன்னணியின் தலைவர் இரா.பிரபாகரன் எனத்தெரிவித்தார்.

SHARE
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்களும் சஜித்துக்கு வாக்களித்து காட்டுங்கள்.வாழைச்சேனை காகித ஆலையை மீள ஆரம்பிப்பதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன் என ஈழவர் ஜனநாயக முன்னணியின் தலைவர் இரா.பிரபாகரன்  எனத்தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஊறணியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஐக்கிய தேசிய முன்னணி அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை(1.11.2019) திறந்து வைத்து உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மங்கள செனரத்,ஈரோஸ் இளைஞர் அணித்தலைவர் சி.சிவதர்ஷன்,ஈரோஸ் அமைப்பின் சமூக அபிவிருத்தி பொறுப்பாளர் எஸ்.சொலமன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ..
இன்று தமிழ்மக்களின் கடந்தகால வரலாறுகள்,தேவைகள் ஏமாற்றப்பட்டுள்ளது.யுத்தம் மௌனிக்கப்பட்டு பத்து வருடங்களை கடந்துள்ள நிலையில் தமிழ்மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதை ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ் கட்சி)வாழ்வாதார வசதிகளையும்,தமிழ்மக்களின் எதிர்பார்ப்புக்கும் போராடிக் கொண்டிருக்கின்றது.

அந்தவகையில் நாட்டிலே மாற்றத்தை நோக்கிய பயணத்தை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நாட்டுமக்களின் நன்மைகருதி மேற்கொண்டு வருகின்றார்.இந்தப்பயணத்தில் தமிழ்மக்களும் இணைந்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி இந்த நாட்டில் வாழ்வதற்குரிய அனைத்து உரிமைகளையும் பெற்றிடவேண்டும்.அதற்காக ஈழவர் ஜனநாயக முன்னணி(ஈரோஸ் கட்சியின்) தலைவர் இரா.பிரபாகரன் தலைமையிலான கட்சியினர் இன்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முன்வந்துள்ளோம்.

வடகிழக்கு,மலையக தமிழ்மக்கள் அனைவரும் சஜித்து வாக்களித்து நாட்டிலே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.சஜித் பிரமதாசவின் தந்தையார் ரணசிங்க பிரேமதாச அவர்கள் நாட்டின் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இலவசக்கல்வி,மாணவர்களுக்கான சீருடை,மருத்துவம்,வறிய மக்களுக்கு வீடமைப்பு வசதிகளை ஏற்படுத்திய தலைவராக திகழ்ந்தார்.அவருடைய காலத்தில் சுமார் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட வீடுகளை இலவசமாக கட்டிக்கொடுத்து பேசப்பட்டத்தலைவராக நாட்டில் திகழ்ந்தார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் அபிவிருத்தி,வாழ்வாதாரம்,தேவைகளை செய்யாமல் அவர்கள் பற்றி குரல்கொடுக்காமல் செயற்பட்ட கூத்தமைப்பாக இருப்பதால் இன்று வடகிழக்கு தமிழ்மக்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பை நிராகரித்து வருகின்றார்கள்.ஆகையால் பாதிக்கப்பட்ட தமிழ்மகளின் தேவையை உணர்ந்து செய்யக்கூடிய தலைவரான சஜித் பிரேமதாசவை நூறு வீதம் வாக்களித்து ஜனாதிபதி ஆக்கும் வாக்களிக்கும் உரிமை தமிழ்மக்களுக்குத்தான் இன்று இருக்கின்றது.

ஈழவர் ஜனநாயக முன்னணி சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக  கிழக்கு மாகாணத்தில் சுமார் 30 ஐக்கிய தேசிய முன்னணி கட்சி அலுவலகங்களை எதிர்வரும் தினங்களில் திறந்து வைக்கவுள்ளோம்.பதிவு செய்யப்படாத தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஏமாற்றுவித்தையை தமிழ்மக்கள் இனியும் ஏமாறத்தயாரில்லை.இன்று தமிழ்தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தல்கள் விடயத்தில் வாயைக் மூடிக்கொண்டு எங்கு பெரியதொகை கிடைக்கும் என பார்த்துக்கொண்டிருக்கின்றது.ஆனால் வடகிழக்கு,மலையகம் உட்பட தமிழ்மக்கள் சஜித்தை ஏகமனதாக ஏற்றுக்கொண்டு அன்னப்பறவைக்கு வாக்களிக்க தயாராகிவிட்டார்கள்.

நாட்டில் உள்ள வறுமைப்பட்ட மக்கள் சஜீத்தை ஜனாதிபதியாக தெரிவு செய்து தங்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற எண்ணியுள்ளார்கள்.இதனால் நாட்டிலே ஸ்திரமான தலைமைத்துவம் ஏற்படவுள்ளது.இதனையும் நாம் ஏற்றுக்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சஜித்து வாக்களியுங்கள்.சஜித்தின் வெற்றியில் நீங்களும் ஒரு பங்காளியாகுங்கள்.சஜித் பிரேமதாசவை பெருபான்மையான மக்கள் வாக்களித்து ஜனாதிபதியாக்க முடிவு எடுத்துள்ள இத்தருணத்தில் மட்டக்களப்பு மக்களும் சஜித்துக்கு வாக்களித்து வாழைச்சேனை காகித ஆலையை மீண்டும் ஆரம்பித்து வறுமைப்பட்ட தமிழ்மக்களின் பொருளாதாரத்தை ஈட்டுவோம் எனத்தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: