3 Apr 2019

போதைப்பொருளற்ற எதிர்கால சமூகத்தை உருவாக்கும் பாரிய பொறுப்பு தற்கால கல்விச் சமூகத்திடம் உள்ளது மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ். உமர்மௌலானா

SHARE
போதைப்பொருளற்ற எதிர்கால சமூகத்தை உருவாக்கும் பாரிய பொறுப்பு தற்கால கல்விச் சமூகத்திடம் உள்ளது.
மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி  எஸ்.எம்.எம்.எஸ். உமர்மௌலானா
போதைப்பொருளற்ற எதிர்கால சமூகத்தை உருவாக்கும் பாரிய பொறுப்பு தற்கால கல்விச் சமூகத்திடம் இருப்பதாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி  எஸ்.எம்.எம்.எஸ். உமர்மௌலானா தெரிவித்தார்.

கிழக்கு மாகாணம் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் பின்தள்ளப்பட்டுள்ள நிலையில் போதைப்பொருள் பாவனையில் முன்னணி வகிப்பதை வேதனையுடன் நோக்கவேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டிற்கான 'சித்திரைப் புதுவருட உறுதியுரை" நிகழ்வு புதன்கிழமை (03.04.2019) மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிமனையில்  நடைபெற்றது.

அங்கு உரையாற்றுகையிலேயே அவர்  இதனைக் குறிப்பிட்டார்.


பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், இணைப்பாளர்கள், அலுவலகத்தின் சகல பிரிவு உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வலயக்கல்விப்பணிப்பாளர் இங்கு தொடர்ந்து பேசுகையில் “எமது நாட்டில் மாவட்டங்கள்தோறும் சனத்தொகைக்கேற்பவே மதுபான சாலைகளை நிறுவுவதற்கான அனுமதி வழங்கப்படுவதுண்டு.

அந்தவகையில் கிழக்கு மாகாணத்தில் அறுபது மதுசாலைகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருபது மதுபான சாலைகளுமே  சட்டரீதியில் இயங்கமுடியும்.

ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் அறுபது மதுசார சாலைகள் உள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அபிவிருத்திப்பணிகளுக்காக மாதாந்தம் சராசரியாக 36 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

ஆனால் இம்மாவட்டத்திலிருந்து மதுபான சாலைகள் மூலமாக அரசாங்கத்திற்கு மாதாந்தம் நாற்பது கோடி ரூபாய் வருமானமாகக் கிடைப்பதாக தகவல்கள் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

மதுபாவனையில் நுவரெலியா, யாழ்ப்பாணத்திற்கு அடுத்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகிறது.
அண்மைக்காலமாக மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகிரித்துள்ளது. இந்நிலையில்   கல்விச் சமூகத்திற்கு பாரிய பொறுப்புக்கள் உள்ளன.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள சுமார் நாற்பதாயிரம் மாணவர்களையும் இரண்டாயிரம் ஊழியர்களையும் பொறுப்பேற்று பாதுகாக்கும் பொறுப்பு எம்மிடம் உள்ளது” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: