உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் என்ற தொனிப்பொருளில் இரத்த தான முகாம் துறைநீலாவணை மகப்பேற்று வைத்திய சாலையில் சனிக்கிழமை (07) நடைபெற்றது.
மட்டக்களப்பு துறைநீலாவணை விஞ்ஞான விழிப்புணர்வு மற்றும் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் புஸ்கரன் சக்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
துறைநீலாவணை இளைஞர்கள், விளையாட்டு கழக உறுப்பினர்கள், அமைப்புக்களின்
உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவுக்கு, இரத்த தானத்தினை வழங்கினர்.
0 Comments:
Post a Comment