20 Dec 2025

மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் பாரிய விபத்து.

SHARE

மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் பாரிய விபத்து.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பாடசாலைக்கு முன்னால் வெள்ளிக்கிழமை இரவு(19.12.2025) பாரிய விபத்து சம்பவித்துள்ளது. 

மட்டக்களப்பு பக்கமிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேன் செட்டிபாளையம் பாடசாலைக்கு முன்னால் பயணிக்கும் போது சாரதியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு வீதியை விட்டு விலகி வீதியோரமிருந்த  மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

வேன் விபத்தில் சிக்கிய சந்தர்ப்பத்தில் சாரதி மட்டுமே வேனில் பயணித்துள்ளதோடு விபத்தில் காயமடைந்த சாரதி அவசர சேவை நோயாளர் காவுவண்டி மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

அப்பகுதியில் தொடர்ந்தும் மழையுடனான காலநிலை நிலவிலருகின்ற இந்நிலையில் இவ்விபத்தில் குறித்த வேன் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது. இதேவேளை ஸ்தல்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.







SHARE

Author: verified_user

0 Comments: