2 Sept 2015

இடைஞ்சலை ஏற்படுத்தியவர் விளக்கமறியலில்

SHARE
பொதுஇடத்தில் சராயம் குடித்து விட்டு பொதுமக்களுக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்திய ஒருவருக்கு இன்று புதன்கிழமை(2) திருகோணமலை நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா ஒரு மாதம் கடுழிய சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.    
நேற்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை நகரில் சனநடமாட்டம் கூடிய பிரதேசத்தில் சாராயம் குடித்து விட்டு பொதுமக்களை தூற்றியமை மற்றும் இடைஞ்சல்கள் ஏற்படுத்தியமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பபெற்ற தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது.


SHARE

Author: verified_user

0 Comments: