12 Jan 2026

டித்வா புயலினால் இடைநிறுத்தப்பட்டிருந்த உயர்தர பரீட்சை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் முன்னெடுப்பு.

SHARE

டித்வா புயலினால் இடைநிறுத்தப்பட்டிருந்த உயர்தர பரீட்சை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் முன்னெடுப்பு.

கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட இயற்கை சீற்றம் காரணமாக தடைப்பட்டிருந்த கல்வி பொதுத் தராதர உயர்தர பரிட்சைகளில் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் தெரிவு செய்யப்பட்ட பரீட்சை நிலையங்களில் திங்கட்கிழமை(12.10.2026) மீளவும் ஆரம்பமாகின. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து கல்வி வளையங்களிலும் திங்கட்;;கிழமை காலை பரிட்சைகள் இன்று இடம் பெற்றன. 

அரசாங்க அதிபரின் பணிப்புரைக்க அமைய மழையினால் பாதிக்கப்படுகின்ற பகுதிகளுக்கு தேவையான முன்னாயத்தப் பணிகளை அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆங்காங்கே தொடர்ச்சியாக மழை பெய்து வரும் காரணத்தினால் பரிச்சாத்திகளை நேர காலத்துடன் பரீட்சை நிலையங்களுக்கு சமூகம் தருமாறு வலைய கல்வி  அலுவலகம் பரிட்சைக்கு தோன்றும் மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.








SHARE

Author: verified_user

0 Comments: