7 Dec 2025

மட்டக்களப்பு களுதாவளையிலிருந்து 1200 இற்கு மேற்பட்ட உலர் உணவுப் பொதிகள் மலையக மக்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு.

SHARE

மட்டக்களப்பு களுதாவளையிலிருந்து 1200 இற்கு மேற்பட்ட உலர் உணவுப் பொதிகள் மலையக மக்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு.

அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் மலையகத்தை புரட்டிப் போட்டுள்ளது. இதனால் இற்றைவரையில் 627 பேர் உயிரிழந்தும், 190 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் 611,530 குடும்பங்களைச் சேர்ந்த 2,179,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அப்புயலினால் அங்குள்ள மக்கள் தமது இருப்பிடங்களை முற்றாக இழந்து நிர்க்கதியாகியுள்ள இந்நிலையில் நாட்டின் நாலாபாகங்களிலிருந்தும், பலரும் தம்மாலியன்ற உதவிகளை நல்கி வருகின்றனர். 

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம், மற்றும் களுதாவளை பொதுமக்களின் ஆதரவுடன் சுமார் 1200 இற்கு மேற்பட்ட உலர் உணவுப் பொதிகள் தயார் செய்யப்பட்டு  மலைய மக்களின் காலடிக்கு நேரடியாகவே கெண்டு சேர்க்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருப்படுகின்றது. ஒவ்வொரு பொதியும் தலா 6000 ருபாவிற்கு மேற்பட்டதாக அமைந்துள்ளதுடன், அவற்றுள் அரிசி, பருப்பு, பால்மா, மீன்ரின், சோயா, உள்ளிட்ட பல உலர் உணவுப் பொருட்கள் அடங்கியுள்ளன.
































SHARE

Author: verified_user

0 Comments: