20 Oct 2025

வவுணதீவு பொலிஸ் பிரிவில் காட்டு யானை தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் சம்பவ இடத்தியே மரணம்.

SHARE

வவுணதீவு பொலிஸ் பிரிவில் காட்டு யானை தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் சம்பவ இடத்தியே மரணம்.

திங்கட்கிழமை(20.10.2025) அதிகாலை மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவுப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு எனும் கிராமத்தில்லுள்ள வீடொன்றில் வசித்து வந்த பெண் காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

அப்பெண் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் தகரத்தினால் அமைத்த குறித்த வீட்டினுள் இருந்த நெல்லை உண்பதற்காக வந்த காட்டு யானையை கண்டு பயத்தில் வெளியே ஓடிய போது யானை தாக்கியுள்ளது. இதில் அவர்  சம்பவ இடத்திலே காட்டு யானை தாக்குதலுக்கிலக்கான பெண் பலியாகியுள்ளார். 

இச்சம்பவத்தில் மரணமானவர் வயது 58 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான வைரமுத்து மலர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இந்நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டு விசாணைகளை மேற்கொண்ட பின்  பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை எடுத்துச் செல்லுமாறு பணித்துள்தோடு, வவுணதீவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

இதே வேளை  மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தியின் அனுமதிக்கமைவாக பிரதேச செயலகத்தினால் யானை தாக்கி இறந்தமைக்காக பத்து இலட்சம் ரூபா நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இதன் முற்பணமாக

மரண சடங்கிற்கு இறந்தவரின் மகனிடம் ஒரு இலெட்சம் ரூபா காசேலையினை கிராம உத்தியோகஸ்த்தர் மற்றும் அனர்த்த நிவாரண முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தரினால் வைத்தியசாலையில் வைத்து வழங்கப்பட்டது.


 





SHARE

Author: verified_user

0 Comments: