மட்டக்களப்பு ஆரையம்பதி வெள்ளை ஸ்ரீ அரசடிப்பிள்ளையார்.
வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி வெள்ளை மணல் ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் சனிக்கிழமை(23.08.2025) கொடியேற்றத்துடன் ஆரம்பம்.
சனிக்கிழமை காலை ஆலயத்தில் இடம்பெற்ற, விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, வேத பாராயணங்கள் ஒலிக்க பக்தர்களின் அரோகரா கோசத்துடன், அரசடிப்பிள்ளையாருக்கு பக்தி பூர்வமாக கொடியேற்றம் நடைபெற்றது.
ஐந்து நாட்கள் இடம்பெறும் இப்பெருவிழாவில் எதிர்வரும் 26 ஆம் திகதி தேரோட்டமும், 27ஆம் திகதி ஆவணி சதுரச்சியில் தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது.
ஆலய உற்சக் கிரியைகள் யாவும் ஆலயம் பிரதம குரு ஹரிகர சர்மா தலையிலான குழுவினரால் நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment