குருக்கள்மடம் பொதுநூலகத்தின் கலைவாணி வாசகர் வட்டத்தின் கலை கலாசார நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட குருக்கள்மடம் பொதுநூலகத்தின் கலைவாணி வாசகர் வட்டத்தின் கலை கலாசார நிகழ்வு சனிக்கிழமை(23.08.2025) நடைபெற்றது.
இதன் போது சிறுவர்களின் பல்வேறு கலை. கலாசார நிகழ்வுகள் இடம் பெற்றவுடன் இதில் பல்வேறு கண்கவர் நிகழ்வுகளும் இடம் பெற்றன.
இந்நிகழ்வில் மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், பிரதேச சபை செயலாளர் சுப்ரமணியம் சுபராஜ், சன சமுக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் குகநேசன், மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஞானரத்தினம், கிராம பொதுமக்கள், கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment