உள்ளுர் அதிகார சபைகள் தேர்தலில் வாக்கெண்ணுதல்
கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கான பயிற்சி
செயலமர்வு.
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் வாக்கெண்ணுதல் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கான வாக்கெண்ணுல் தொடர்பான பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் புதன்கிழமை(23.04.2025) இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் தலைமையில் வாக்கெண்ணுதல் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி செயலமர்வானது மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
தேர்தல் கடமைகளில் ஈடுபடும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த விடையங்கள் தொடர்பாகவும், தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக தெளிவூட்டப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கடமைக்காக இம்முறை 457 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கப்படவுள்ளதுடன் 144 வாக்கெண்ணும் நிலையங்களாக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் மாவட்ட புள்ளி விபரவியளாலர் ரீ.ஜெய்தனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment