6 Jan 2025

ரொட்டரி மாவட்ட ஆளுநர் சுசேனா ரணதுங்க திருகோணமலைக்கு உத்தியோகபூர்வ விஜயம்.

SHARE

ரொட்டரி மாவட்ட ஆளுநர் சுசேனா ரணதுங்க திருகோணமலைக்கு உத்தியோகபூர்வ விஜயம்.

ரெட்டரி இலங்கை மாவட்ட - 3220 ஆளுநர் சுசேனா ரணதுங்க ஞாயிறு;க்கிழமை(05.01.2025) திருகோணமலை ரொட்டரி கழகத்துக்கு விஜயம் செய்தார்.

ஆளுநரின் செயலாளர் காமினி மடநாயகே, உதவி.ஆளுநர் ஜி.ஜெயபாலச்சந்திரன் அவர்களும், அவருடன் இணைந்து கொண்டிருந்தார்.

 கிரேஸ் ஹோம் சிறுவர்களின்; வரவேற்பு நடனத்துடன் திருகோணமலை ரொட்டரி ரொட்டரி கழகத்தின் தலைவர் ஜெகதீசன் அதிதிகளை வரவேற்றார்.

 இதன்போது செயலாளர் ரவிச்சந்திரன் 2024 வருட செயல்பாடுகள் பற்றி சுக்கமான விளக்கத்தை அளித்தார்.

ஆளுநர் ஜெரோம் ராஜேந்திரம் திருகோணமலை ரொட்டரி கழக நடவடிக்கைககளை பாராட்டியதுடன் மேலும்லிட்டில் ஹார்ட்” , “தற்கொலை தடுப்புபோன்ற ரோட்டரி தேசிய நிகழ்ச்சிகளை விளக்கினார். 

ஆளுநர் ஜெரோம் ராஜேந்திரம் தனது விஜயத்தின் போது, நிலாவெளி கோபாலபுரத்தில் உள்ள மகளிர் கிராம அபிவிருத்திச் சங்க மீன்பிடி அமைப்புகளுக்கு வலைகளுடன் கூடிய 10 மீன் பிடி படகுகளை (கேனோன்- Canoes)  கையளித்தார்.  திருகோணமலை ரோட்டரி சங்கத்தினால் PP Pர்கு PP PHF அகிலனின் நிதியில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை தபால் நிலைய சந்தியில் அவர் திறந்து வைத்தார். திருகோணமலை ரோட்டரி சங்கத்தினால் பராமரிக்கப்படும் மான்கள் சரணாலயதையும் பார்வையிடார்.

பின்னர் இதன்போது 2024-2025 வருடத்துக்கான தலைவராக தெரிவு செய்யப்படட  பிரபாகரன் நன்றியுரை  நிகழ்த்தினார்.












SHARE

Author: verified_user

0 Comments: