17 Dec 2024

செட்டிபாளையத்தில் நோய்காவு வண்டியும், போரூந்தும் மோதி பாரிய விபத்து.

SHARE

செட்டிபாளையத்தில்  நோய்காவு வண்டியும், போரூந்தும் மோதி பாரிய விபத்து.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையத்தில் இன்று செவ்வாய்கிழமை(17.12.2024) காலை பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. 

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவதவதாவது மட்டக்களப்பிரிருந்து களுவாஞ்சிகுகுடி நோக்கி சென்று கொண்டிருந்த நோய்காவு வண்டி (அம்பியுலான்ஸ்) அதே திசையில் எதிரே சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான போரூந்தில் மோதியுள்ளது. 

இப்பாரிய விபத்துச் சம்பவத்தில் தெய்வாதீனமாக இரு வாகனங்களிலும் பயித்தவர்கள் உயிர் தப்பியுள்ளதுடன்,  நோய்காவு வண்டியில் (அம்பியுலான்ஸ்) பயணித்த சாரதி உட்பட முன்று பேர் காயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது. 

குறித்த நோய்காவு வண்டியில் (அம்பியுலான்ஸ்) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிலிருந்து புறப்பட்டு, களுவாஞ்சிகுடியில் நடைபெறவுள்ள கூட்டம் ஒன்றுக்காக சென்றவேளையிலேயே இவ்விபத்துச் சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது. 

பேரூந்தில் பயணித்த பிராயாணிகள் எவதுக்கும் எதுவித சேதமும் ஏற்படாத இந்நிலையில், நோய்காவு வண்டியில் (அம்பியுலான்ஸ்) பயணித்த சாரதி, விசேட தாதிய பரிபாலகி, மற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவருமாக மூன்றுபோர்  இதில் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்;றது. எனினும்  நோய்காவு வண்டியின் (அம்பியுலான்ஸ்) முன்பகுதிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பேரூந்தின் பின் பகுதியிலும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இவ்விடையம் அறித்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
















SHARE

Author: verified_user

0 Comments: