7 Jul 2024

களுவாஞ்சிகுடியில் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் அமரர் இரா சம்பந்தனுக்கு நினைவேந்தல்.

SHARE

அமரர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (06.07.20204) பி.ப 4.00 மணியளவில்   இலங்கை தமிழரசுக்கட்சியின் களுவாஞ்சிக்குடி பிரதேச குழுவின் தலைவரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான மேகசுந்தரம் வினோராஜ்  தலைமையில் களுவாஞ்சிகுடி பேரூந்து நிலையத்தில்  இடம்பெற்றது.

இந் நிகழ்வில் சர்வ மத தலைவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், பா.அரியநேந்திரன், ஞா.கிருஷ்ண பிள்ளை, இலங்கை தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர். 

இதன்போது நினைவு சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மௌன அஞ்சலி , செலுத்தப்பட்டதுடன்,  நினைவு பேருரைகளும் இடம்பெற்றன.


















 


 

SHARE

Author: verified_user

0 Comments: