6 Apr 2024

கிழக்கில் முதலாவது சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயம் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

SHARE

கிழக்கில் முதலாவது சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயம் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில் அமைந்துள்ள ஏத்தாலைக் குளம் பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளஇது கிழக்கில்முதலாவது சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாகும்.

இதற்கான உத்தியோகபூர்வ அங்குரார்ப்பன நிகழ்வு வெள்ளிக்கிழமை (05.04.2024) குருக்கள்மடம் ஐயனார் ஆலய முன்றலில்  நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி முரளிதரன் மற்றும், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் தம்மிக்க கருணாரெத்தின, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெகநாத், காத்தான்குடி பிரதேச செயலாளர் .உதயசிறீதர், மற்றும் கமலந அமைப்புனர் பொதுமக்கள், பாடசாலை சுற்றாடல் முன்னோடி கழக மாணவர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஏத்தாலைக் குளத்தை பாதுகாப்பதற்குரிய அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களையும் மாவட்ட செயலாளர் வழங்கி வைத்தார். பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்னம் ஆகியார் அடங்கி குழுவினர் ஏத்தாலைக் குளத்தில் தங்கியுள்ள உள்ளாட்டு வெளிநாட்டுப் பறவைகளைப் பார்வையிட்டனர்.

குருக்கள்மடம் ஏத்தாலைக் குளத்தில் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் காணப்படுதோடு உல்லாசப்பயணிகளையும், கவரும் இடமாகவும், அருகிவரும் தாவரங்கள், மற்றும் பூச்சியினங்களையும் கொண்டமைந்துள்ளது.




































SHARE

Author: verified_user

0 Comments: