24 Apr 2024

விவசாயிகளுக்கு பண்ணை வியாபாரப் பயிற்சி.

SHARE

விவசாயிகளுக்கு பண்ணை வியாபாரப் பயிற்சி.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பண்ணை வியாபாரப் பாடசாலை கருப்பொருளிக்கீழ் பயிற்சிநெறி ஒன்று குருக்கள்மடம் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கமத்தொழில் அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் மாதுளை பயிற் செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிக்கு இப்பயிச்சிநெறி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வியாபாரமாக விவசாயத் தொழில், பண்ணையின் தற்போதைய நிலமைகளை ஆராய்தலும், சந்தைவாய்ப்புக்களை இனம்காணலும், விவசாய வியாபாரம் தொடர்பான அடிப்படை எண்ணக்கருக்களை தெழிவு படுத்துதல், விற்பனையும் சந்தைப்படுத்தலும், சந்தை மதிப்பீட்டிற்கு ஆயத்தமாதல், பண்ணைப் பகுப்பாய்வுகளை மேற்கொள்ளல், வியாபாரத்திட்டமிடல், போன்ற பல விடையங்கள் இதன்போது விவசாயிகளுக்கு தெழிவூட்டப்படுகின்றன

இப்பயிற்சிநெறி 12 நாட்கள் நடைபெறவுள்ளதுடன், இறுதியில் விவசாயிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

இதில் சிரேஸ்ட விவசாயப் போதனாசிரியரும், பயிற்றுவிப்பாளருமான சிறிபவன் அவர்கள் வளவாளராகக் கலந்து கொண்டு விவசாயிகளுகுரிய பயிற்சிகளை வழங்கி வருகின்றார்.









SHARE

Author: verified_user

0 Comments: