இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் நெசவுத் தொழிலாளர்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு.
நெசவு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் "Threads for Hope" எனும் தொனிப்பொருளில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிலிருந்து 11 பயனாளிகளுக்கும், மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிலிருந்து 02 பயனாளிகளுக்கும் அவர்களது நெசவுத்தொழில் மேம்பாட்டிற்காக 150,000 ரூபா பெறுமதியான நூல்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் திருமதி அனுராதி பிரேஹரா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் த.நிர்மல்ராஜ், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் மாவட்ட உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், பயனாளிகளுடன் சந்தைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment