26 Feb 2024

முனைப்பு நிறுவனத்தினால் பொண்டுகள்சேனை பாடசாலைக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைப்பு.

SHARE

முனைப்பு நிறுவனத்தினால் பொண்டுகள்சேனை பாடசாலைக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைப்பு.

கடந்த வெள்ள அனர்த்தத்தினால் வெகுவாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் முற்றாக இழந்த கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொண்டுகள்சேனை கணபதி வித்தியாலய மாணவர்களின் கற்றல் நடவடிக்கையினை மேம்படுத்துவதற்காக முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனம் மட்டக்களப்பு மாவட்ட ஒன்றிணைந்த இளைஞர் அபிவிருத்திக் குழுவுடன் இணைந்து கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளது.     

பாடசாலை அதிபர் திருமதி லெட்சுமி ஜெயகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முனைப்பு சுவிஸ் கிளை தலைவர் மாணிக்கபோடி குமாரசாமி முனைப்பு ஸ்ரீ லங்கா தலைவரும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியுமான மாணிக்கப்போடி சசிகுமார் பொருளாளர் ,தயானந்தரவி மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை சமூகம் என பலர் கலந்து கொண்டனர்.

கடந்த வெள்ள அனர்த்தத்தில் பெரிதும் பாரிப்புற்ற இப்பகுதி மாணவர்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு காலடிக்கே கொணர்ந்து கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்த முறைப்பு ஸ்ரீ லங்கா அமைப்புக்கு அப்பகுதி கல்விச் ச மூகத்தினர் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.










SHARE

Author: verified_user

0 Comments: