5 Oct 2023

குருமண்வெளியில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வு.

SHARE

குருமண்வெளியில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வு.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமும் குருமண்வெளி கிராம பொதுமக்கள், மற்றும் கிராம பொது அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சர்வதேச சிறுவர் தின நிகழ்வு  செவ்வாய்கிழமை (2023.10.03)  பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் குருமண்வெளி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

'எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் இவ்வருடத்திற்கான  சிறுவர் தின நிகழ்வில் பல கலை நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டத்துடன், சிறுவர் மற்றும் முதியோருக்கான விளையாட்டு நிகழ்வுகளும் நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது

மேலும் கல்வி, கலைமற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல பிரிவுகளில் தேசிய ரீதியில் தங்களது திறமைகளை வெளிக்காட்டிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன், பிரதேச மட்டத்தில் சிறந்த இயங்குநிலை கொண்ட கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழு, சிறுவர் கழகச் செயற்பாடு, பாடசாலை மட்ட சிறுவர் பாதுகாப்பு குழு முதலான குழுக்களுக்கும் குறித்த காலத்தில் அதிகளவாக நூலகங்களை பயன்படுத்திய மாணவர் மற்றும் விசேட திறமையால் சாதனை படைத்தவர்களும், தெரிவு செய்யப்பட்டு  இதன்போது பாராட்டி பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரன், பிரதேச சபைச் செயலாளர் எஸ்.அறிவழகன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரி.அபயவிக்கிரமபிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிறுவர்கல்வி மற்றும் சுகாதார திணைக்கள பிரதிநிதிகள்குருமண்வெளி பிரதேச பாடசாலை அதிபர்கள்விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள்மாதர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,  ஆலயங்களின் பிரதிநிதிகள்சமூர்த்தி சங்கங்களின் உறுப்பினர்கள்சிக்கன கடனுதவி சங்கத்தினர்முதியோர் சங்கங்கள் முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள்குருமண்வெளி பொது நூலகர்மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











 

 

SHARE

Author: verified_user

0 Comments: