3 Oct 2023

வன்னிஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் போரதீவுப்பற்றில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு.

SHARE

வன்னிஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் போரதீவுப்பற்றில் நடைபெற்ற  சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு.

சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகமும் சமூர்த்தி திணைக்களமும் இணைந்து வன்னிஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின விழா செவ்வாய்க்கிழமை(03.10.2023) லாச்சோலை கருணைமலைப் பிள்ளையார் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  பிரதம அதிகதிகளாக போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் சாதனை படைத்த சிறுவர்களும்முதியோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் வன்னிஹோப் நிறுவனத்தின் மாவட்ட இணைப்பார் சீ.ரேகாபிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் துலாஞ்சனன்பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார்கணக்காளர் அம்பிகாபதிசமூர்த்தி திணைக்கள அதிகாரிகள் பிரதேச செயலகத்தின் ஏனைய உத்தியோகஸ்த்தர்கள்முன்பள்ளி பாடசாலைகளின் சிறுவர்கள்முதியோர்கள்பாடசாலை மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது சிறுவர்களினதும்முதியோர்களினதும் பல கலை நிகழ்ச்சிகள் ஆற்றுகை செய்யப்பட்டதுடன்கலந்து கொண்ட சிறுவர்களுக்கும்முதியோர்களுக்கும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிலையில் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் சாதனை படைத்த சிறுவர்களும் முதியோரும் இதன்போது பொன்னாடை போரத்தி பரிசில்களும்ஞாபகச் சின்னங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.





























SHARE

Author: verified_user

0 Comments: