களுவாஞ்சிகுடி பொலிசாரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பொசன் நிகழ்வு.
போசன் தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொசன் கொண்டாட்டமும், மரவெள்ளிக்கிழங்கு வழங்கு நிகழ்வும் செவ்வாய்கிழமை (14) மாலை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி ரி.அபேயவிக்கிரமவின் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அப்பகுதி பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ஜெயரத்ன அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது பொலிசாரால் பெருமளவான மரவெள்ளிக்கிழங்கு அவித்து, மட்டக்களப்பு கல்முனை பிரான வீதியில் பணித்துக் கொண்டிருந்தவர்களுக்கும், அசசூழலிலுள்ளவர்களுக்கும், வழங்கப்பட்டன. மக்கள் அதனை விரும்பி வந்து பெற்றுச் சென்றனர்.
0 Comments:
Post a Comment