13 Feb 2022

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்குரிய அமைப்பாளர் நியமனம்.

SHARE

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்குரிய அமைப்பாளர் நியமனம்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்குரிய அமைப்பாளராக முன்னாள் பிரதி அமைச்சர் சோமசுந்தரம் கணேசமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ அவர்களினா னல் கொழும்பில் அமைந்துள்ள கட்சித் தலைமைக் காரியாலயத்தில் வைத்து இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாப்பின் 62 ஆவது சரத்தின் மூலம் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் 2022 ஆம் ஆண்டுக்கான பட்டிருப்பு தேர்தல் பிரிவின் அமைப்பாளராக நீங்கள் நியமிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதன்படி, கட்சி யாப்பின் 6.9 முதல் 6.16 வரையிலான பிரிவுகள் மூலம் தொகுதி அமைப்பாளராக உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான தலைமையையும் பொறுப்பையும் உங்களுக்கு வழங்குகிறது (அந்த ஷரத்துக்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.)

மேலும் இந்த நியமனத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டதாக கட்சியின் பொதுச் செயலாளருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என அவருக்கு வழங்கப்பட்டுள்ள நியமனக் கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.






SHARE

Author: verified_user

0 Comments: