மட்டக்களப்பு - கிரான்குளம் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி
பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் செவ்வாய்கிழமை(15) மாலை இடம்பெற்றுள்ளது. கிரான்குளம் வடக்கு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளையின் தாயான 52 வயதுடைய ந.பிரமராணி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் சம்பவதினமான செவ்வாய்கிழமை(15) மாலை வழமைபோல தனது வெள்ளரி தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுவதற்கு நீர் பாம்மில் மின்சாரம் கையாண்ட போது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கர்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment