17 Jun 2021

பயணத்தடையால் வாழ்வாதாரத்தை இழந்த கர்ப்பிணி தாய்மார்களுக்கு மட்டக்களப்பில் நிவாரண உதவிகள் வினியோகம்.

SHARE

பயணத்தடையால் வாழ்வாதாரத்தை இழந்த  கர்ப்பிணி தாய்மார்களுக்கு மட்டக்களப்பில் நிவாரண உதவிகள் வினியோகம்.

பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் தெரிவு செய்யப்பட கர்ப்பிணி தாய்மார்களுக்கான பிரசவகால அத்தியாவசிய பொருட்கள் செவ்வாய்கிழமை (15) வழங்கிவைக்கப்பட்டது.

தொடர்ச்சியான கொரோனா மற்றும் பயணத்தடை காரணமாக வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளான நிலையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் கர்ப்பிணி தாய்மார்களுக்கான ' கிரேஸ் லைப் லைன் ' தொண்டு நிறுவனத்தின் நிதி உதவியின் கீழ் இந்த பிரசவகால அத்தியாவசிய பொருட்களை  பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி .டாக்டர்  .உதயகுமார் வழங்கி வைத்தார்.

மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலத்தில் செவ்வாய்கிழமை  நடைபெற்ற பொருட்கள் வழங்கும் நிகழ்வில் ' கிரேஸ் லைப் லைன் ' தொண்டு நிறுவன பிரதிநிதிகள் சுகாதார அதிகாரிகள் தாதிய உத்தியோதகத்தர்கள் உட்பட பலரும் கலந்து  கொண்டனர்.கலந்துகொண்டனர்.

சுமார் 13 ஆயிரம் பெறுமதியான பொருட்கள் 60 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.








SHARE

Author: verified_user

0 Comments: