மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கே.கருணாகரன் அவர்கள் நியமனம்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக இலங்கை நிருவாக சேவை விசேட தரத்தை சேர்ந்தவரும் , தற்போதைய கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளராக கடமையாற்றும் கே. கருணாகரன் அவர்கள் நியமனம் பெற்றுள்ளார்.
இன்று பிற்பகல் அதற்கான அமைச்சரவை நியமன கடிதத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.
தற்போதைய அரச அதிபராக கடமையாற்றும் திருமதி .கலாமதி பத்மராஜா அவர்கள் பொது நிர்வாக , மாகாண சபைகள் ,உள்ளூராட்சி அமைச்சிற்கு உடனடியாக அமுலாகும் வரையில் இணைக்கப்பட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment