21 Jul 2020

ஜனநாயத்தை நாட்டிலே மீண்டும் உருவாக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்தி காட்டுங்கள் - மட்டு.மாநகரசபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் திருமதி.சசிகலா விஜயதேவா.

SHARE
(விஜய்)

ஜனநாயத்தை நாட்டிலே மீண்டும் உருவாக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்தி காட்டுங்கள் - மட்டு.மாநகரசபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் திருமதி.சசிகலா விஜயதேவா.மட்டக்களப்பு மாவட்ட மக்கள் ஐக்கிய தேசியகட்சிக்கு வாக்களித்து எமது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கரங்களை பலப்படுத்தி மீண்டும் ஜனநாயகத்தினை நாட்டிலே உருவாக்குவதற்கு ஒத்துழைக்க வேண்டுமென மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி.சசிகலா விஜயதேவா தெரிவித்தார்.

மட்டக்களப்பில் திங்கட்கிழமை(20) நடைபெற்ற ஊடக சந்திப்பிலே அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்... தற்போது இந்த நாட்டிலே தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு சமாதானத்தையும், ஐக்கியத்தையும், நல்லிணக்கத்தையும், ஏற்படுத்தி சிறந்த ஆட்சியை நாட்டிலே உருவாக்கிய கட்சி என்றால் அது ஐக்கிய தேசிய கட்சிதான். வேறு கட்சி என்று சொல்லமுடியாது. இதற்கு சமாதானத்துடன் ஒத்துழைத்த தலைவர் என்றால் ரணில் விக்கிரமசிங்க மட்டும்தான். எமது கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க சிறுபான்மையின மக்களை நேசித்து சிறப்பான அபிவிருத்தியை வடகிழக்கிற்கு ஏற்படுத்தி தந்திருந்தார். அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் தமிழ்தேசிய கூட்டமைப்பும், தமிழ்மக்களும் ஜனநாயகமாகவும், சமாதானத்துடனும் செயற்பட்டார்கள். இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கவினால் உருவாக்கப்பட்ட ஆட்சியை மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவின் கைகளுக்கு கிடைக்க வேண்டுமானால் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் மாற்றத்துடன் ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்த வேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சியால் மட்டும்தான் நாட்டிலே சிறப்பான ஆட்சியை  ஏற்படுத்தப்பட்டுள்ளது. வறுமைப்பட்ட மக்களின் பொருளாதாரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. பொருட்களின் விலை இன்று மலைபோல் உயர்ந்துள்ளது. பொதுமக்கள் பொருட்களை கொள்வனவிற்கு அதிக பணத்தை செலவு செய்கின்றார்கள். பருப்பு, சீனி, ரின்மீன், கோதுமைமா, சமையல் எரிவாயு, பால்மா பொருட்கள் உட்பட பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இவ்வாறு பொருட்களின் விலை அதிகரிப்பதால் வறுமைப்பட்ட மக்கள் பசி, பட்டினியுடன்தான் தமது சீவியத்தை கடக்க நேரிடும். வறுமைப்பட்ட மக்களின் துன்பங்களை எமது ஐக்கிய தேசிய கட்சியால்தான் முடியும். எனவே மட்டக்களப்பில் மாற்றத்தை கொண்டு வருவோம். மாகாணத்திலும், நாட்டிலே மாற்றத்தை கொண்டு வருவோம்.

எங்களுடைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு சிறப்பான கௌரவம் வழங்கப்பட்டு யுத்தத்தினால் மோசமடைந்த பகுதிகளுக்கு கூடிய நிதியை வழங்கி தமிழ் பிரதேசங்கள் சிறப்பான அபிவிருத்தியை கண்டிருந்தது. இதனால் தமிழ்மக்களுக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்குமிடையே ஜனநாயகம் கட்டியெழுப்பட்டது. இவ்வாறு கிடைக்கப்பெற்ற ஜனநாயத்தை நாட்டிலே மீண்டும் உருவாக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்தி காட்டுங்கள் எனத்தெரிவித்தார்.
 

SHARE

Author: verified_user

0 Comments: