11 May 2020

ஏறாவூரில் முதன்முறையாக மூலிகைச் செங்காளான் உற்பத்தி வெற்றியளித்துள்ளது.

SHARE
(ஏ.எச்.ஏ. குஸைன்)


ஏறாவூரில் முதன்முறையாக மூலிகைச் செங்காளான் உற்பத்தி வெற்றியளித்துள்ளது.
மட்டக்களப்பு, ஏறாவூரில் முதன்முறையாக மூலிகைச் செங்காளான் உற்பத்தி வெற்றியளித்துள்ளதாக ஏறாவூர் விரிவாக்கல் பிரிவு விவசாயப்  விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.


ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளிடத்தில் பரீட்சார்த்தமாக மேற்கொண்ட காளான் செய்கை அறுவடை போதனாசிரியை முர்ஷிதா ஷிரீன் தலைமையில் காளான் செய்கையாளரான ஏ. சித்தி நஸீரா வின் காளான் வளர்ப்புக் கூடத்தில் திங்களன்று (11.05.2020) இடம்பெற்றது.

21 நாட்களில் மிகக் குறைந்த உழைப்பிலும் செலவிலும் மேற்கொண்டு அறுவடையைப் பெற்றுக் கொள்ளக் இந்தக் காளான் செய்கை மூலம் அதிக இலாபத்தை ஈட்ட முடியும் என முர்ஷிதா ஷிரீன் மேலும் தெரிவித்தார்.

காளான் செய்கையை ஊக்குவிப்பதற்காக பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு காளான் செய்கைக்கான அனைத்து தொழினுட்ப  வழிகாட்டல்களும் விவசாயத் திணைக்களத்தினால் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

“கெனொடர்மா” என்னும் இந்த வகை மூலிகைக்காளான் செய்கையானது தற்போது பிரபல்யமானதொரு பொருளாதாரச் செய்கையாக விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த வகைக் காளான் உடல் நலத்திற்கு உகந்தது என்று அதன் நுகர்வாளர்களால் நம்பப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை “கெனோடர்மா” வின் மருத்துவக் குணம், அதன் மூலம் மனிதனுக்கு கிடைக்கும ; நன்மைகள ;பற்றிவிவசாய விஞ்ஞானிகளால் இதுவரை சிபாரிசு செய்யப்படாத நிலையில் அதன் ஆராய்ச்சி இடம்பெற்று வருவதாகவும் முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.












SHARE

Author: verified_user

0 Comments: