தொடர்ந்து வெறிச்சோடிக் காணப்படும் மட்டக்களப்பு.
கொவிட் 19 எனப்படும் புதியவகை கெரோனா வைரஸின் தாக்கம் மக்களுக்குப் பரவும் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டு வரும் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தொடர்ந்து தங்களது ஒத்துழைப்புக்களை வழங்கி வரகின்றார்கள்.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு நகர், ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை, ஓட்டமாவடி, காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிகுடி, கொக்கட்டிச்சோலை, உள்ளிட்ட பிரதான நகரங்களில் அமைந்துள்ள பொதுச் சந்;தைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதோடு வீதிகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
தனியார், மற்றும் அரச போக்குவரத்துக்கள் அனைத்தும் இடம்பெறவில்லை, வைத்தியசாலைகளின் இயங்குகின்ற போதிலும், ஒரு சிலர் மாத்திரம் சென்று மருந்துகளைப் பெற்றுக் கொண்டு செல்கின்றனர். அரச அதிகாரிகள் மக்களுக்குரிய நிவாரண சேவைகளையும், சமூர்த்திக் கொடுப்பனவுகளையும் கிராமங்களுக்குள் நேரடியாக மக்களின் காலடிக்குச் சென்று வழங்கி வருகின்றனர்.
இவற்றினைவிட மாவட்டத்திலுள்ள பிரதான வீதிகள், மற்றும் கிராமங்களிலுள்ள உள் வீதிகளுக்குள்ளும் இராணுவத்தினர் ரோந்து நடிவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மக்களுக்கு இலவுகுவான முறையில் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வேண்டி பிரதேச செயலகம், மற்றும் பொலிசாரின் அனுமதி பெற்ற வாகனங்களில் மாத்திம் கிராமங்களுக்கு, வாகனங்களில் மரக்கறி வகைகள் விற்பனை செய்யப்பட்டு வரப்படுவதோடு, விவசாய நடவடிக்கைகள், அனைத்தும் சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றன.
0 Comments:
Post a Comment