12 Feb 2020

பெண்களுக்கான வன்முறையைக் தடுத்தல்.

SHARE
பெண்களுக்கான வன்முறையைக் தடுத்தல்.
பெண்களுக்கான வன்முறைகளைத் தடுத்தல் எனும் தொணிப் பொருளின் கிழ் பிரித்தானிய கவுன்ஸில், FISD, மற்றும் ஜனதக்ஸன், ஆகிய நிறுவனங்களின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டம் அம்பிளாந்துறையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது பெண்களுக்கான வன்முறையைக் தடுத்தல், போதைவஸ்த்துப் பாவனைகளைக் குறைத்தல், குடும்ப வன்முறைகளை ஒழித்தல், எதிர்காலத்தில் வன்னுமறையில்லாத ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புதல், போதையில்லாத சமூகத்தைக் உருவாக்குதல், எதிர்காலத்தில் சிறந்த நற்பண்புள்ள சமூகத்தை உருவாக்குதல், உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பில் இதன்போது எடுத்தியம்பப்பட்டன. 

இதில் வளவாளர்களாக ஜனதக்ஸன் நிறுவனத்தின் இணைப்பாளர், மற்றும், பிரதேச செயலக அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களுக்கு கருத்துக்களை வழங்கினர்.

இந்நிகழ்வில் ஜனதக்ஸன் நிறுவன அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள், கிராமசேவை உத்தியோகஸ்தர், கிராம பெரியோர்கள், பொலிசார், பொதுமக்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தர்.




SHARE

Author: verified_user

0 Comments: