மட்டக்களப்பு மாநகரப் பிரிவிலுள்ள வடிகான்கள் பருவ மகை;காலம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே முன்னாயத்த நடவடிக்கையால் துப்புரவு செய்யப்பட்டதாக மட்டக்களப்பு மாநகர சபையின் சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்.
சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட இந்நடவடிக்கையின்போது நகரின் பாரிய வடிகானில் அடைக்கப்பட்டிருந்த கழிவுகள், பொலித்தீன்கள், பிளாஸ்டிக் கொள்கலன்கள்; மற்றும் மண்கள் மாநகர சுகாதாரத் தொழிலாளர்களினால் அகற்றப்பட்டன.
இதேவேளை கோட்டைமுனை மகா மாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் செல்லும் நகரின் பாரிய வடிகான் கனரக வாகனங்களைப் பயன்படுத்தி துப்பரவுப் பணிகள் இடம்பெற்றன.
சுகாதார மேற்பார்வையாளர் எஸ். துஸ்யந்தனின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த வடிகானின் 200 மீற்றர் நீளமான வடி கானின் கழிவுகள் அகற்றப்பட்டன. கழிவு முகாமைத்தவம் பற்றி மாநகரசபையின் சுகாதாரப் பிரிவினால் விழிப்புணர்வுகளை மக்களுக்கு ஏற்படுத்தியும் கழிவுகளை சேகரிக்கும் வாகனங்களை வீதிக்கு வீதி அனுப்பியும் அவர்கள் மீண்டும் மீண்டும் கான்களுக்குள் கழிவுகளை இடுவதைக் தவிர்க்க வேண்டும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பாக்கியநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் கழிவு முகாமைத்துவத்தை இலகுபடுத்தும் நோக்கோடு புதிதாக 30 சுகாதாரத் தொழிலாளர்களுக்கான நியமனம் கடந்த வியாழக்கிழமை (06.09.2018) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் மாநகர நிருவாகத்தினால் வழங்கி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



0 Comments:
Post a Comment