யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தாய் நாட்டிற்காக தமது உயிரைத் தியாகம் செய்த அல்லது சம்பவங்களின்போது அங்கவீனமடைந்த படையினர் மற்றும் பொலிஸாரை நினைவு கூறும் ரணவிரு வீரர்களின் மாகாண நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் பங்கு பற்றலுடன் திருகோணமலையில் திங்கட்கிழமை 28.05.2018 மாலை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முப்படை அதிகாரிகள், மாவட்ட அரசாங்க அதிபர்கள், உள்ளுராட்சி அதிகாரிகள் மற்றும் மாகாண நிருவாக அதிகாரிகள், ரணவிரு சேவா அதிகாரிகள், ரணவிரு தேசிய வீரர்களின் உறவினர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.
இந்நிகழ்வில் ரணவிரு தியாகிகளுக்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. ரணவிரு வீரர்களுக்கும் குடும்ப உறவினர்களுக்கும் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.
0 Comments:
Post a Comment