14 Aug 2026

மைலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்.

SHARE

மைலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வருடக்கணக்காக தமது மேச்சல் ததைப் பகுதிக்காகப் போராடி வரும் கால்நடை வளர்ப்பு பண்ணையார்கள், மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக தமது நீண்ட கால இப்பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை(14.08.2026) பாரிய அமைத்திவளி ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Mannar Social and Economic Development Organization  எனும் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்போராட்டாத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் முகமாக காணியை இழந்த மன்னார் மக்கள், யாழ்ப்பாணம் வலி வடக்கு மக்கள், முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய கேப்பாப்பிளவு மக்கள், மற்றும், மைலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் என பலர் இதுன்போது கலந்து கொண்டிருந்தனர். 

பண்ணையாளர்கள் தமிழர்கள் என்பதால் தீர்வு வழங்குவதில் தாமதமா? பண்ணையாளர்களின் மேச்சல் தரையைப் பதிவு செய்வதில் ஏன் தாமதம், பல ஆண்டுகள் கடந்தும் மக்களின் காணிகளை ஒப்படைக்க காலம் போதாதா என பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது ஏந்தியிருந்தனர்.


























































SHARE

Author: verified_user

0 Comments: