28 May 2018

செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தினால் நடாத்தப்பட்ட வருடாந்த புலமைப் பரிசில்கள் வழங்குதலும், கௌரவிப்பு நிகழ்வும்.

SHARE
மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தினால் நடாத்தப்பட்ட வருடாந்த புலமைப் பரிசில்கள் வழங்குதலும், கௌரவிப்பு நிகழ்வும் மேற்படி ஆலய முன்றலில் ஞாயிற்றுக் கிழமை (27) நடைபெற்றது.
ஆலய பரிபாலனசபைத் தலைவர் பா.கௌதமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.வி.சிவப்பிரியா, கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் சி.மனோகரன், மண்முனைப் பற்று பிரதேச சபைச் செயலாளர் ந.கிருஷ்ணபிள்ளை, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைச் செயலாளர் க.லட்சுமிகாந்தன், மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஆலயத்தின் நிருவாக சபையிலிருந்து சேவையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற வண்ணக்குமார்கள் பொன்னாடை போர்த்தி, வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், ஆலயத்தினால் நடாத்தப்பட்ட இந்துசமய அறிவுப்போட்டியில் வெற்றிபெற்றமாணவர்களுக்கும் சான்றிதழ்கழும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தகதாகும்.




























SHARE

Author: verified_user

0 Comments: