எமது இந்து சமயத்தைச சேர்ந்தவர்கள் நாளாந்தம் வேறு மதங்களுக்கு மாறிக் கொண்டிருப்பதை ஊடகங்கள் வாயிலாக அவதானிக்க முடிகின்றது. வாகரை, கதிரவெளி, பால்சேனை, போன்ற இடங்களிலுள்ள மக்கள் நளாந்தம் ஏனைய மதங்களுக்கு மாறிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான விடையத்தை எமது புத்திஜீவிகள் சிந்திக்க வேண்டும். எமது சமயத்தில் சமூக நோக்குப் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருக்கின்றது.
சங்காரவேல் பௌண்டேசன் எனும் அமைப்பு கிழக்கு மாகாணத்திலிருந்து மருத்துவத்துறை, பொறியியல்முறை போன்றவற்றிற்கு பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்களின் கற்றல் முடியும்வரை மாதாந்தம் 10000 ரூபா நிதியை ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இதுபோன்று பல உதவிகளையும் கவ்விக்காக உதவி செய்து வருகின்றார்கள். இதுபோன்று முனைப்பு என்றின்ற அமைப்பும் செயற்பட்டு வருகின்றது. நாம் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட காலத்தில் எமக்கு இலங்கை வங்கியினூடாக கிடைந்த கடன் உதவி மாத்திற்கு 125 ரூபா எனக்கு அக்காலத்தில் கிடைக்த்த மொத்த கடன் 9000 ஆயிரம் ரூபா ஆனால் தற்போது மாணவர்களுக்கு கற்றலுக்கு உதவிகளை மேற்கொள்வதற்கு பலர் முன்னின்று செயற்படுகின்றார்கள். இந்நிலையில் எமது ஆலயங்களில் இவ்வாறான விழிப்புணர்வுகள் பொதாது உள்ளது என்கபதை மனவேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் தெரிவுகள் அனைதும் கல்வியாகத்தான் இருக்கின்றது. கல்வியில் முன்னேற்றங்களைக் கொண்டுவந்தால்தான் வாழக்கையில் முன்னேற்றங்களைக் கொண்டுவரலாம்.
எமது சகத்தில் சிலருக்கு பெரிய வசதி வாய்ப்புக்கள் இல்லாமலிருக்கும் ஆனால் வீட்டுக்குள்ளே பெற்றோர் தொலைக் காட்சி பாரத்துக் கொண்டிருப்பார்கள், மறுபன்னம் பிள்ளை பரீட்சைக்கு படித்துக் கொண்டிருக்கும்.நிலையும் காணப்படுகின்றது. ஆனால் ஏனைய சகத்தில் பிள்ரளை பரீட்சைக்குத் தோற்றுமு; காலம் வந்ததும் தொ(ல்)லை காட்சிப் பெட்டியை கட்டி வைத்து விடுகின்றார்கள். அனைவரும் பார்க்கக் கூடிய இடத்தில்தான் கணணியையும் வைப்பார்கள். மாறாக நமது சமூகத்தில் பிள்ளை சாதாரதண தரத்தில் சித்தி பெற்று விட்டால் ஐ போண், லெட்டொப், மோட்டார் சைக்கிள், வாங்கித்தருவேன் என்றுதான் பிள்ளைகளை பெற்றோர்கள் பழக்குகின்றார்கள். நமது சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கின்றது. என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.
0 Comments:
Post a Comment