காத்தான்குடி நகர சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற போனஸ் ஆசனத்தை போட்டியிட்ட வேட்பாளருக்கு தலா ஒவ்வொரு வருடம் என்ற அடிப்படையில் பகர்ந்து கொள்ள உடன்பாடு காணப்பட்டள்ளது.
இந்த உடன்பாட்டின்படி மாஹிர் (தாறுஸ்ஸலாம் வட்டாரம்), ஜௌபர் கான் (மீராபள்ளி வட்டாரம்), முகைதீன் சாலி (அல்-அக்ஸா வட்டாரம்), சப்ரி (நூறாணியா வட்டாரம்) ஆகியோர் இந்த ஒரு வருடகால நகரசபை உறுப்பினருக்கான உடன்பாட்டில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
உடன்பாட்டில் கைச்சாத்திடும் நிகழ்வு 28.05.2018 திங்கட்கிழமை இரவு கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுத்தீன் அவர்களின் வழிகாட்டலில் அக்கட்சியின் தேசிய தவிசாளரும் கடற்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவருமான எம்.எஸ்.எஸ். அமீர்அலி முன்னிலையில் காத்தான்குடி நகரசபைக்கான முதல் வருட உறுப்பினர் மாஹிரின் இல்லத்தில்இடம்பெற்றது.
0 Comments:
Post a Comment