1 Jan 2018

மட்டக்களப்பு வாவியைத் தூய்மையாகப் பேணும் விழிப்புணர்வுத் திட்டம் இனிப்புகள் வழங்கி ஆரம்பித்து வைப்பு

SHARE
“நமது குப்பையை முகாமைத்துவம் செய்து நமது சூழல், நமது வாவியின் தூய்மையை உறுதிப்படுத்துவோம்” எனும் கருப்பொருளில் மட்டக்களப்பு வாவியைத் தூய்மையாகப் பேணும் விழிப்புணர்வு பிரச்சாரம் ஞாயிற்றுக்கிழமை 31.12.2017 ஏறாவூர் வாவிக்கரையோர சிறுவர் பூங்கா, மற்றும் பொழுது போக்கு கரையோரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா “ஷெட்” நிறுவனத்தின் Sri Lanka SHED Foundation  தலைவர் கே. அப்துல் வாஜித் தெரிவித்தார்.
நகரமய நெருக்கடியில் திண்மக் கழிவு முகாமைத்துவம் சவால்களைச் சந்தித்து வருவதால் நமது சூழல், நிலம், நீர், வளி என்பன அசுத்தமடைந்து வருவதால் இந்த விழிப்புணர்வைத் துவங்கியதாக அவர் மேலும் கூறினார்.

இந்த விழிப்புணர்வின் விநோதமாக வாவிக்கரைப் பூங்காவிற்கு வருகை தரும் சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் இனிப்பு மிட்டாய் வழங்கி அதன் கடதாசியை குப்பைத் தொட்டியில் இடச் செய்த பின்னர் சிறுமிகளுக்கு  கூந்தல் அலங்காரக் கட்டு நாடாவும், வளர்ந்தோருக்கு திண்மக் கழிவு முகாமைத்துவ பிரசுரமும் விநியோகிக்கப்பட்டன.


SHARE

Author: verified_user

0 Comments: