3 Oct 2017

வவுணதீவு பிரதேசத்தில் விவசாயத் திட்டங்களுக்கு 30 இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான உபகரணங்கள் கையளிப்பு

SHARE
தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்க அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் நல்லிணக்கம் சார் பொருளாதார வலுவூட்டல் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் விவசாயத் திட்டங்களுக்கென தொழில் உபகரணங்கள் செவ்வாய்கிழமை 03.10.2017 வழங்கிவைக்கப்பட்டன.
வவுணதீவு பிரதேசத்தில் தொடர்ச்சியாக விவசாயம் மேற்கொண்டுவரும் தெரிவுசெய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய்கள் என்ற அடிப்படையில் 30 இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான விவசாய உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
விவசாயிகளுக்கு உபகரணங்களைக் கையளித்த பின்னர் பயனாளிகள் மத்தியில் உரையாற்றிய பிரதேச செயலாளர் எஸ். சுதாகர்@ குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தும்பொருட்டு வழங்கப்படும் இவ் உபகரணங்கள் அந்த நோக்கத்திற்காக சரியான முறையில் பயன்படுத்த வேண்டியது மிக அவசியமானதாகும்.

இவைகள் சரியான முறையில் பயன்படுத்தப் படுகின்றனவா என்பது பற்றி எமது பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களின் கண்காணிப்பு தொடர்ச்சியாக இருந்துகொண்டே இருக்கும்.

அதேவேளை, இவ் உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் வீட்டினுள் இருந்தாலோ அல்லது வேறு விதமாக பயன்படுத்தினாலோ அதனை மீளப் பெற்று சரியான முறையில் பயன்படுத்த தயாராக இருக்கும் வேறு பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டிய சந்தர்ப்பமும் அமையும்.
இதனை உணர்ந்துகொண்டு சிறந்த முறையில் இந்த உபகரணங்களைப் பயன்படுத்தி விவசாயிகள் தமது வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவேண்டும்” என்றார்.
நிகழ்வில், மண்முனை வவுணதீவு உதவிப் பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு, திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ரி. நிர்மலராஜ் மற்றும் பயனாளிகளான விவசாயிகளும் கலந்து கொண்டனர்.







SHARE

Author: verified_user

0 Comments: