அனைவருக்கும் 13 வருட உயர்கல்வித் திட்டம் எனும் புதிய கொள்கை மாணவ சமுதாயத்தின் நம்பிக்கையுடனான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். பதூர்தீன் தெரிவித்தார்.
அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட உத்தரவாத கல்வியை வழங்கும் புதிய திட்டம் மட்டக்களபபு மத்தி கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி தேசியக் கல்லூரியில் (மத்திய மகா வித்தியாலயம்) திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அங்கு கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது@
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி தேசியக் கல்லூரிம், பட்டிருப்பு மகா வித்தியாலயமும் இந்த 13 வருட உத்தரவாதக் கல்வித் திட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இரு பாடசாலைகளிலும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த எந்த சமூகத்து மாணவர்களும் இணைந்து தமது கல்வியைத் தொடர முடியும்.
காத்தான்குடி தேசியக் கல்லூரியில் 147 பேருக்கு அனுமதி உண்டு. தற்போது வரை 28 பேர் இணைந்து கொண்டுள்ளார்கள்.
இங்கு கல்வியை வழங்குவதற்கென 5 வல்லுநர்கள் மற்றும் அதிபர் ஆகியயோர் பயிற்றுவிக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை மேலதிக தொழில் வல்லுநர்கள் வெளியிலிருந்து அழைக்கப்பட்டுள்ளார்கள்.
மாணவர்கள் பல்வேறு உள்ளக மற்றும் புறக் காரணிகளால் மன உளைச்சலுக்கு உள்ளாகியதன் காரணமாக தமது தேர்ச்சியில் கவனம் செலுத்த முடிந்திருக்கவில்லை என்பதைக் கருத்திற் கொண்டு இந்த அரசாங்கம் அனைவருக்கும் உத்தரவாத உயர்தரக் கல்வி என்ற இந்த உன்னத திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
ஆகையினால், மாணவர்கள் தாம் போதியளவு சித்தி பெறவில்லை என்ற எந்தவித மனச் சோர்வும் அடையாமல் தன்னம்பிக்கையுடன் சக மாணவர்களின் பாடசாலைக் கல்வி உணர்வுடனேயே தங்களது வாழ்க்கைத் தொழிற் திறன் கல்வியைத் திருப்தியாக நிறைவு செய்து கொள்ள முடியும்
மாணவர்களை பாடசாலையில் இருந்தவாறே தொழில்வாய்ப்பு உலகுக்குத் தயார்படுத்தி அனுப்புவதே தற்போதைய அரசாங்கக் கல்வித் திட்டத்தின் நோக்கம்.
கடந்த காலங்களில் தமது தேர்ச்சி குறைவானது என்கின்ற மன உளைச்சலில் பலர் விரக்தி நிலைக்குச் சென்று தற்கொலைகளையும் புரிந்திருக்கின்றனர்.
ஆனால், அது ஒரு மனித வள பேரிழப்பாகக் கருத்திற் கொள்ளப்பட்டதன் காரணமாக புதிய, சகலருக்கும் உயர் கல்வி என்ற கொள்கை வகுக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.
எனவே, இந்த அரிய வாய்ப்பை மாணவர்களும் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேவேளை பெற்றோரும் பாதுகாவலர்களும் இத்தகைய போதியளவு தேர்ச்சிகளைப் பெறாத மாணவர்களுக்கு ஊக்கமும் ஒத்தாசையும் அளித்து அவர்களை நாட்டுக்கு வீட்டுக்கும் நாட்டுக்கும் வளம் சேர்க்கும் வல்லுநர்களாக மாற்ற முயற்சிக்க வேண்டும்.
இத்தகைய மாணவர்களுக்கு சிறந்த தொழிற் தேர்ச்சிகளை வழங்கி வழிகாட்டுவதற்கு விஷேட தொழிற் திறன் நிபுணர்களும் அதற்கென அதிபரும் பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
மாணவர்கள் கடந்த காலத்தில் விட்ட தவறுகளை இனிமேலும் விடாமல் எதிர்காலத்தில் நிச்சயப்படுத்திக் கொள்வதற்குச் இது ஒரு சிறந்த வாய்ப்பு.” என்றார்.
தற்போது நாடு முழுவதிலுமுள்ள 42 தேசியப் பாடசாலைகளில் ஒக்ரோபெர் முதல் வாரத்திலிருந்து புதிய உத்தரவாதக் கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் குறைந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களுக்காக 27 புதிய பாடநெறிகள் இத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment