மட்டக்களப்பு – திராய்மடுப் பிரதேசத்தில் புகையிரதத்தினால் மோதுண்ட ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
புதன்கிழமை இரவு கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த இரவு நேர புகையிரதம் வியாழக்கிழமை 14.09.2017 அதிகாலை 4.30 மணியளவில் மட்டக்களப்பை நெருங்கும் இந்த நபர் புகையிரதத்தில் மோதுண்டு ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
சுமார் 48 வயது மதிக்கத் தக்க ஆணின் சடலத்தை தாம் மீட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment