5 Sept 2017

மியான்மர் ரோஹிங்கியா இனச்சுத்திகரிப்புக்கு எதிரான கவன ஈர்ப்புப் பேரணி

SHARE
மியன்மார் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மியன்மார் அரச படையினர் மற்றும் பௌத்த தேசியவாத அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்ற வன்செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க ஐக்கிய நாடுகள் சபை முன்வர வேண்டும் என வலியுறுத்தும் கவன ஈர்ப்புப் பேரணி சனிக்கிழமை ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் பரவலாக இடம்பெற்றது.

அம்பாரை மாவட்டப் பொதுப் பணிகள் அமைப்பின் தலைவரும் அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.எல். முனாஸ் தலைமையில் அட்டாளைச்சேனை கோணாவத்தையில் இடம்பெற்ற பேரணியில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் உட்பட பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர்.

கவன ஈர்ப்பில் ஏந்தியிருந்த பதாதைகளில்  “கொடூர கொலைத்தாக்குதல்களை நிறுத்தி உடனடியாக ஐ.நா. விசாரணை செய்ய வேண்டும்” “ரோஹிங்கியா முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அராபிய நாடுகள் ஐக்கிய நாடுகளின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.
தனை கண்டிக்கிறோம், ரோஹிங்கிய முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்க எடுக்க வேண்டும் அல்லது அம்மகளுக்கு பிறநாடுகளில் அடைக்கலம் கொடுக்க வேண்டும்” என்றும்  ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கோசம் எழுப்பினர்.

மியன்மாரின் ரக்கையின் மாநிலத்தில் சுமார் 11 இலட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்கள் அங்கு 1200 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வருவதாக வரலாற்றுச் சான்றுகள் இருந்தும் அம்மக்களுக்கு குடியுரிமை வழங்க மியன்மார் அரசு முன்வரவில்லை.
குடியுரிமை இல்லாமையால் எந்த உரிமையும் அற்ற சமூகமாக மிகவும் மோசமான முறையில் பௌத்த தேசியவாத அமைப்புக்களாலும் மியன்மார் அரசினாலும் ஒடுக்கப்பட்டு வருகின்றனர்.

உலகின் மிகப்பெரிய நாடற்ற சிறுபான்மை சமூகமாக அடையாளப்படுத்தப்படும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது பௌத்த தேசியவாத அமைப்புக்களினதும்  மியன்மார் இராணுவத்தினதும் வரம்பு மீறிய அட்டூழியங்கள், முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

அந்த நாட்டுக்குள் சமூத தொண்டு நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், விசாரணைக் குழுக்கள் யாரையும் அனுமதிக்க முடியாது என்று அந்நாட்டு அரசு பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில் அங்கு பிரச்சனைக்குள்ளாகியிருக்கும் மக்களின் சரியான நிலமையினை கண்டு அல்லது கேட்டறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

என்றும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அம்பாரை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.எல். முனாஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். 





SHARE

Author: verified_user

0 Comments: