உலக சமாதான தினத்தை அனுஷ;டிக்கும் முகமாக தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட சமாதான ஊர்வலம் சனிக்கிழமை 30.09.2017 மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளதாக பேரவையின் இணைப்பாளர் இராசையா மனோகரன் தெரிவித்தார்.
சமாதானத்தின் அவசியம் உணரப்பட்டுள்ள சமகாலத்தில் அதனை செயலுருப்பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த சமாதான ஊர்வலத்தை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
காலை 8.30 மணிக்கு மட்டக்களப்பு திருமலை வீதி தாண்டவன்வெளி காணிக்கை மாதா தேவாலய முன்றலில் இருந்து ஆரம்பமாகும் இவ்வூர்வலம் மட்டக்களப்பு காந்திப் பூங்காவைச் சென்றடைந்தவுடன் சமாதான ஆர்வலர்களால் சமாதானத்தை வலியுறுத்தும் சொற்பொழிவுகள் இடம்பெறவுள்ளன.
இன, மத, பால், மொழி, வயது மற்றும் பிரதேச வேறுபாடுகளைக் கடந்த மேற்படி சமாதான ஊர்வலத்தில் ஆர்வமுள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தாம் பொதுவாகவும் கௌரவமாகவும் அழைப்பு விடுப்பதாக மனோகரன் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment