14 Sept 2017

இளைஞர் யுவதிகளின் நன்மை கருதி மாபெரும் கல்வி மற்றும் தொழில்வழிகாட்டல் கண்காட்சி

SHARE
பாடசாலை கல்வியை பூர்த்திசெய்யும் மாணவர்கள் தொழில் கல்வியை கிழக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர் யுவதிகளின் நன்மை கருதி மாபெரும் கல்வி மற்றும் தொழில்வழிகாட்டல் கண்காட்சி மட்டக்களப்பில் வியாழக்கிழமை (14) ஆரம்பமானது.
பாடசாலை கல்வியை பூர்த்திசெய்யும் மாணவர்கள் தொழில் கல்வியை பெற்றுக்கொள்ளும் வகையிலும் சிறந்த தொழில் வாய்ப்பினை எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ளும் வகையிலும் இந்த கண்காட்சி ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
லிவின் லங்கா மற்றும் பிக்காஸ் கம்பஸ் இணைந்து நடாத்தும் இந்த மாபெரும் கண்காட்சியினை இன்று வியாழக்கிழமை காலை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறுக், லிவின் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர்களான ஜெ.எம்.ஹபீ,எச்.எம்.எம்.ஹமீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் பாடசாலைக்கல்வினையும் பல்கலைக்கழக கல்வியையும் பூர்த்திசெய்த மாணவர்கள் தொழில் துறைக்குள் உள்வாங்கப்படுவதற்கு வழிதெரியாது போராட்டம் நடாத்தும் நிலையிருந்துவருகின்றது.
இந்த நிலையில் அவ்வாறானவர்களை சரியான தெரிவுகளை மேற்கொண்டு சிறந்த தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் வகையில் ஊக்கப்படுத்தும் வகையில் இந்த கண்காட்சி அமைந்துள்ளது.

வியாழக்கிழமை காலை ஆரம்பமான கண்காட்சியானது வெள்ளிக்கிழமை மாலை 07.00மணி வரையில் நடைபெறவுள்ளது.

இந்த கண்காட்சியில் 25க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளதுடன் ஐந்துக்கும் மேற்பட்ட தொழில் வழங்குனர்களும்,பிரதேச செயலக தொழில் வங்கியும் பங்குபற்றியுள்ளது.

அத்துடன் இலங்கை திறந்த பல்கலைக்கழகம்,தொழில்நுட்ப கல்லூரிகளும் தமது கிளையினை ஏற்படுத்தி சேவைகளை வழங்கிவருகின்றது.










SHARE

Author: verified_user

0 Comments: